Statement from Raghava Lawrence

63

 

எனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் நான் கூறிய கருத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள தவறான புரிதலை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நான் எப்போதும் எனது ரசிகர்களையும் பொதுமக்களையும் என் தாய்க்கு நிகராக மதித்து வந்துள்ளேன். ஆனால், நான் மக்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியதாக சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுமாகும்.

நான் கூறியதன் உண்மையான பொருள் என்னவென்றால், ஒருவர் புதிய வீட்டிற்கு குடியேறும்போது அங்குள்ள சூழல், அப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் சுற்றுப்புறத்தைப் புரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்படும் என்பதுதான். அதற்கு எடுத்துக்காட்டாக அப்பகுதியில் இருக்கும் நாய்களின் பழக்கவழக்கங்கள் பற்றியும் குறிப்பிட்டேன்.

நான் மதிக்கும் மக்களை, என் தாய்க்கு இணையாகக் கருதும் மக்களை, நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு மனமில்லாதவன் அல்ல. புதிய சூழலுடன் பழகுவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதையே நான் கூறினேன்; எந்த இடத்திலும் மக்களை குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை.

எனவே, அனைவரும் முழு காணொளியையும் பார்த்து, நான் உண்மையில் என்ன கூறினேன் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து எனக்கு அளித்து வரும் ஆதரவுக்கும் புரிதலுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com