
பல க்ரைம் திரில்லர் படங்கள் இருந்தாலும், திரைக்கதை, கதைக்களம் மற்றும் பாத்திரப்படைப்பு ஆகியவற்றில் ”நாட் ரீச்சபிள்” திரைப்படம் வித்தியாசமாக இருக்கும். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நீங்கள் யூகிக்க முடியாது, மேலும் திரைக்கதை அமைப்பு உங்களை இருக்கை முனையில் ஈர்க்கும். ”நாட் ரீச்சபிள்” க்ரைம் த்ரில்லரான திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு முருகானந்தம் எழுதி இயக்கியுள்ளார், மேலும் அவர் கடந்த காலங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த தில்லை மற்றும் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். . க்ராக்பெயின் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இத்திரைப்படம் , செப்டம்பர் 9, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக நடிகர் விஷ்வா ஸ்ரீதரன் மற்றும் சாய் தன்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் விஜயன், சுபா, காதல் சரவணன், பிர்லா போஸ், ஷர்மிளா மற்றும் சாய் ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சரண் குமாரின் இசையும், சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மேலும் “திரைக்கதை தனித்துவமானது மற்றும் கொலைக்கான காரணம் சந்தேகத்திற்கு இடமின்றி புதிய அடிப்படை” என்று இயக்குனர் சந்துரு கூறினார் . இந்த முரண்பாடான கிரைம் த்ரில்லர் ”நாட் ரீச்சபிள்” திரைப்படம் செப்டம்பர் 9, 2022 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்ன படக்குழு அறிவித்துள்ளது .
7 Attachments
