சென்னை, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் இசை விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் கலந்து கொண்டு கலைஞர் விருதினை நடிகர் திரு. எம்.நாசர் அவர்களுக்கும், ராஜரத்னா விருதினை வடுவூர் திரு. எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், இயல்செல்வம் விருதினை திருவாரூர் புலவர் இரெ. சண்முகவடிவேலன் அவர்களுக்கும், இசைச்செல்வம் விருதினை திருமதி காயத்திரி வேங்கடராகவன் அவர்களுக்கும், நாட்டியச்செல்வம் விருதினை திருமதி அனிதாகுஹா அவர்களுக்கும், நாதஸ்வரச்செல்வம் விருதினை திருமெய்ஞானம் சகோதரர்கள் -திரு.டி.கே.ஆர். ஐயப்பன் அவர்களுக்கும், திரு. டி.கே.ஆர்.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கும், தவில்செல்வம் விருதினை நாங்கூர் திரு.என்.கே.செல்வகணபதி அவர்களுக்கும், மிருதங்கச்செல்வம் விருதினை தஞ்சாவூர் திரு. கே.முருகபூபதி அவர்களுக்கும் வழங்கி சிறப்பித்தார்.