கட்டில் திரைப்படக்குழு நடத்தும் “கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி”

646

முதல் பரிசு : 25,000
இரண்டாம் பரிசு : 15,000
மூன்றாம் பரிசு : 10,000
ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள்….

நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு,
கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியை அறிவித்திருக்கிறது….

12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31(2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பவும்.

தேர்வுக்குழு முடிவே இறுதியானது……

உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும், பங்கேற்கும் இப்போட்டியில் ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்.

பிரபல கவிஞர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான கவிதைகளுக்கு, விரைவில் நடைபெற இருக்கும் கட்டில் திரைப்பட (Audio Release) பாடல் வெளியீட்டு விழாவில் பரிசு தொகை காசோலையாக வழங்கப்படும் என்று இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அறிவித்திருக்கிறார்

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com