Trisha interacts with young champions

573

ஊடக ஆலோசனை

என்ன:
திரைப்பட நடிகை மற்றும் யுனிசெஃப் அமைப்பின் பிரபல குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதரான த்ரிஷா, 2019 ஆம் ஆண்டில், குழந்தைகள் வன்கொடுமை, சுரண்டல்கள் மற்றும் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் சில பகுதிகளில் உள்ள வளரிளம் பருவ சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் கணிசமான நேரத்தை செலவிட்டார், அங்கு குழந்தைகளை வன்கொடுமைகளுக்கு எதிராகப் பேசவும், சமூகங்களில் உள்ள சிறுமிகளின் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தவும் இளம் பருவத்தினரையும், இளைஞர்களையும் அவர் ஊக்குவித்தார்.

ஒரு வருடம் கழித்து, குழந்தைத் திருமண சம்பவங்கள் எதுவும் அந்தப் பகுதிகளில் நடைபெறவில்லை என்பதும், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் எதுவும் பதிவாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் உள்ள வளரிளம்பருவ சிறுமிகள் தங்களைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் பற்றி பேசுவதால் அதிக மேம்பாடு அடைந்துள்ளார்கள். மேலும் அவர்கள் தங்கள் வயதையொத்த நண்பர்களையும் அணுகி, இது குறித்து அவர்களும் பேசும் அளவிற்கு மேம்பாடு அடையச் செய்துள்ளனர். இந்த நல்மாற்றத்தை த்ரிஷாவின் ஊக்கமளிக்கும் பேச்சுக்கு அவர்கள் சமர்ப்பணமாக்கவும், மீண்டும் த்ரிஷாவை சந்திக்கவும் விரும்புகிறார்கள்.

சிறுவர் சிறுமிகளின் வேண்டுகோளைக் கேட்டு, இந்த இளம் சாம்பியன்களை சந்திக்க த்ரிஷா சம்மதித்தார்.

எப்பொழுது:
சர்வதேச பெண் குழந்தைகள் தினமான அக்டோபர் 11 ஆம் தேதி, இளம் சாம்பியன்களுடன் த்ரிஷாவின் கலந்துரையாடல் மாலை 6:00 மணிக்கு யுனிசெஃப் இந்தியா பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் திரையிடப்படும்.

யார்:
1. செல்வி. த்ரிஷா கிருஷ்ணன், யுனிசெஃப் அமைப்பின் பிரபல குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதர்.
2. ஜாஃப்ரின் சவுத்ரி, முதல்வர், தகவல் தொடர்பு, பரிந்துபேசுதல் மற்றும் கூட்டிணைத்தல், யுனிசெஃப்
3. ஆர்.ஜே.சனோ,

புகைப்பட வாய்ப்பு – செல்வி த்ரிஷா வளரிளம்பருவத்தினருடனும், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் குழந்தை உரிமைகளுக்காக செயல்படும் செயல்வீரர்களுடனும்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com