Kadamaiyai Sei Movie Gallery & Preview

586

Kadamaiyai Sei Movie Gallery & Preview

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

கடமையை சரியாக செய்தால் அதற்கான பலன் தானாக வரும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது

எஸ்.ஜே.சூர்யா – யாஷிகா அனந்த் நடித்துள்ள ” கடமையை செய் “

கதாநாயகனாக  S.J.சூர்யா நடித்துள்ளார், கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மற்றும்  மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி ,  அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, உமா, நிஷா, ஜெயவேல், பேபி ஹர்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் சுந்தர்.C யிடம், உதவியாளராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியதோடு அவரை நாயகனாக வைத்து ” முத்தின கத்திரிக்காய் ” என்ற வெற்றிப் படத்தை இயக்ககிய  வேங்கட் ராகவன்  கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

நெடுநல்வாடை, எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வினோத் ரத்னசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தொகுப்பு N.B ஸ்ரீகாந்த் ,  தடம் படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார்,  பாடல்கள் அருண்பாரதி,  சண்டை பயிற்சி பிரதீப் தினேஷ்,  நடனம் தீனா – சாண்டி, மக்கள் தொடர்பு  மதுரைசெல்வம், மணவை புவன் , கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் TR ரமேஷ், நாகர் பிலிம்ஸ்  ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தில் எஸ்ஜே.சூர்யாவிற்கு டபுள் டைம் ஸ்டிராங் கேரக்டர். அவர் இப்படித்தான் இருப்பார் என்ற மனநிலையில் இருப்பீர்கள் ஆனால் இந்த படத்தில் அவர் அப்படி இருக்க மாட்டார், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் அவருக்கு.  ஃபேமிலி ஆடியன்ஸ்ல இருந்து அத்தனை பேரையும் கவர்ந்து இழுக்கிற படமா எல்லா ஜானரையும் இதில்  வைத்துள்ளோம்.

இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் “கடமையை செய்”  திரைப்படம் படப்பிடிப்பு சிறப்பாக நிறைவுற்றது. POST PRODUCTION வேலைகள் வெகு தீவிரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும்  நடிகர்கள், TECHNICIANS அனைவருக்குமான PCR TEST ( கொரோனா TEST ) எடுக்கப்பட்டு அதில் அனைவருக்கும் NEGATIVE என வந்தபிறகே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர். இப்படியாக இரண்டு மூன்று முறை தயாரிப்பு தரப்பில் கொரோனா CAMP அமைக்கப்பட்டு அனைவரும் NEGATIVE என உறுதிசெய்யப்பட்டு பிறகே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நிறைய நட்சத்திர பட்டாளம் என்பதால் தயாரிப்பாளர்கள் மேலும் கூடுதல் கவனம் செலுத்தினார்கள்.

படப்பிடிப்பு இனிதே முடிந்தது என நாங்கள்  சந்தோஷப் பட்டுக்கொண்டிருந்த  நிலையில் யாஷிகா ஆனந்த் வாகன விபத்தில் சிக்கி அவருடன் சென்ற தோழி மரணம் அடைந்த நிலையில் படுகாயத்துடன் உயிர் தப்பினார் என்ற செய்தி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யாஷிகா ஆனந்த் தொழில் ஈடுபாடும், திறமையும் மிக்கவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
“கடமையை செய்” திரைப்படம் மிகவும் நன்றாக வந்துள்ளதாக அனைவரும் கூறும் நிலையில், ஒரு நல்ல வெற்றியை நோக்கிய அவர் திரை பயணத்தின் இடையில் இது போன்ற விபத்து யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com