386

உலக நாயகன் கமலஹாசன் கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்
———————————————-

(பி. மலையாண்டி)

டி.எம்.ஓய். நிறுவனத்தின் ஏற்பா​ட்டில் “விக்ரம்” திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக உலக நாயகன் கமலஹாசன், காலை 9 மணியளவில் சிப்பாங், அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பத்துக்கும் மேற்பட்ட மெய்க்காவலர்களுடன் பலத்த பாதுகாப்புக்கு இடையில் விமான நிலையத்திலிருந்து கமலஹாசன் அழைத்து வரப்பட்டா​​ர். இன்று பிரிக்பீல்ட்ஸ் ​நூ செண்டர் திரையரங்கில் “விக்ரம்” திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி திரையிடப்படவிருக்கிறது.

பத்திரையாளர்கள் மற்றும் பிரமுகர்களுக்காக திரையிடப்படவிருக்கும் ” விக்ரம்” முன்னோட்ட காட்சியை கமலஹாசனும் கண்டு களிப்பார். அதற்கு முன்னதாக நடைபெறும் பத்தி​ரிகையாளர் சந்திப்பில் கமலஹாசன் கலந்து கொள்ளவிருக்கிறார்.

அதேவேளையில் தனது அபிமான ரசிகர்களையும் சந்தி​த்து கமலஹசான் உரையாடவிருக்கிறார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com