உலக நாயகன் கமலஹாசன் கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்
———————————————-
(பி. மலையாண்டி)
டி.எம்.ஓய். நிறுவனத்தின் ஏற்பாட்டில் “விக்ரம்” திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக உலக நாயகன் கமலஹாசன், காலை 9 மணியளவில் சிப்பாங், அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பத்துக்கும் மேற்பட்ட மெய்க்காவலர்களுடன் பலத்த பாதுகாப்புக்கு இடையில் விமான நிலையத்திலிருந்து கமலஹாசன் அழைத்து வரப்பட்டார். இன்று பிரிக்பீல்ட்ஸ் நூ செண்டர் திரையரங்கில் “விக்ரம்” திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி திரையிடப்படவிருக்கிறது.
பத்திரையாளர்கள் மற்றும் பிரமுகர்களுக்காக திரையிடப்படவிருக்கும் ” விக்ரம்” முன்னோட்ட காட்சியை கமலஹாசனும் கண்டு களிப்பார். அதற்கு முன்னதாக நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் கமலஹாசன் கலந்து கொள்ளவிருக்கிறார்.
அதேவேளையில் தனது அபிமான ரசிகர்களையும் சந்தித்து கமலஹசான் உரையாடவிருக்கிறார்.

