#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 27th May Corona News By Naveen On May 27, 2020 526 Share தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக உயர்வு இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது . தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது. இன்று 817 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 558 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,203 இன்றைய 817 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 18,545 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 9,909பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு – 6 /133 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 27th MayCovid-19 526 Share