தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக உயர்வு
இன்று மட்டும் 639
பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது.
இன்று 639 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 482 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,750
இன்றைய 639 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 11,234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 4,172 பேர் தமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர்.
