Diamon Babu Gallery

திரைப்பட துறையை
தன்னுடைய சுவாசமாக நினைத்து இளம்,நடுத்தர வயதில் மட்டுமல்ல,முதுமை முற்றிய வயதிலும்
எண்ணிலடங்கா சினிமாவை பற்றிய அரிய வகையான சேகரிப்புகள், சேமிப்புகள் சினிமாவின் கூகுள் (Google) லாக வாழ்ந்தவர்.
மெகா ஜாம்வான்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பார்வையால் ஜொலித்தவர்.
தெ.தி.ப.தொ.யூ.(பி.ஆர்.ஒ.) அமைப்பின் முதல் தலைவரும் இந்த தொழிலுக்கு வழிகாட்டியாக இருந்து
நூற்றுக்கணக்கானவர்கள் உருவாக காரணமாக இருந்தவருமான பெருமதிப்பிற்க்குறிய அய்யா
கலைமாமணி,திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள்.
தகவலுக்கு வருவோம்,
இப்படிப்பட்ட பெருமகனாரின் மகனை பற்றி சொல்ல வேண்டுமோ
“புலிக்கு பிறந்தது பூனை யாகுமா”என்று சொல்வார்கள்.
தன்னுடைய தந்தை காலத்திலயே இவர்தான் என் மகன் என்று சொல்வதைவிட ,
இவரின் அப்பா என சொல்ல வைத்த மகனை சிலரைத்தான் பார்த்திருப்போம்.
அதில் ஒருவர் தான் இவர்,
அப்பா தன்னுடைய மகனை அழைத்துச்சென்று பிரபலமான ஹீரோ படத்தில் பணிபுரிய வைக்க
அதுவும் முதன் முதலில் திரைப்பட கல்லூரி மாணவரான ஆபாவாணன் சார் இவரை நம்பி முழுமையாக பி.ஆர்.ஒ. வாய்ப்பு வழங்கியதோடு மட்டுமல்லாமல்
அந்த முதல் படத்தில் தந்தை,மகனுமான திரு. பிலிம் நியூஸ் ஆனந்தன்திரு.
டைமண்ட்பாபு
இருவரையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் ஆபாவாணன்* சார்.
புரட்சிக்கலைஞர்,கேப்டன்
அவர்களின் நல்ல மணம் போலவே “உமைவிழிகள் ”
படம் பட்டிதொட்டியெல்லாம் உலா வந்து பேரையும் புகழையும் பெற்றுத்தந்தது.
திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன்
அவர்கள் வாழுங்கின்ற காலத்திலயே நற்பெயரைப் பெற்ற மகனாக எடுத்துகாட்டாக விளங்கி
பல்வேறு முன்னணி நடிகர்கள்,நடிகையர்,தயாரிப்பாளர், இயக்குனர்கள் என என அனைைவருடன்
வெள்ளி,வெற்றிவிழா படங்கள் என பணிபுரிந்த திரு.டைமண்ட் பாபு,
தமிழ் சினிமா உலகில்
சுபமும்-அசுபமும், இதில் எது நடந்தாலும் முதல் ஆட்களாக
தந்தையும்-மகனுமாக இருக்க கூடியவர்கள்.
பெரியவர்கள் சொல்லி கேட்டுள்ளேன்.
40 வயதை கடந்தாலே அதன்பிறகு வரும் ஒவ்வொரு வயதும் கடவுளின் கொடை என்பார்கள்
குடும்ப சினிமா பி.ஆர்.ஒ. உறுப்பினர்கள், பத்திரியாளர்கள் என அனைவருக்கும் நண்பர்,
தெ.தி.ப.தொ.யூனியனின் தலைவராக இருந்தவருமான
திரு டைமண்ட் பாபு 🤝💐🍫அவர்கள்
1960-2020 வரை
25ம் ஆண்டு வெள்ளி விழா,50ம் ஆண்டில் பொன்விழா கொண்டாடி
நாளை (இன்று) 60 வயது பூர்த்தியடைந்த பிறந்தநாள் ஆண்டாக கொண்டாடுகிறார்.
விரைவில் தம்பதியினர் இருவரும் லாக்டவுன் முடிந்தவுடன்
மணிவிழா தம்பதிகளாக மணவிழா மேடையில் காண நாம் அனைவரும் சிறப்பான அந்த விழாவில்
நம்முடைய குடும்ப பி.ஆர்.ஒ. உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள்
என நாம் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிப்போம்.
இந்நன்னாளில் எல்லா வல்ல இறைவன்-இறைவிடத்தில் திரு.டைமண்ட் பாபு* திருமதி.டைமண்ட்பாபு
தம்பதியினர்
நீண்ட நெடிய நாள் நோய் நொடியில்லாமல் வாழ உங்களோடு இணைந்து வேண்டுதலோடு விழைகிறேன்.
அன்புடன்
ஆதம்பாக்கம் ராமதாஸ்.
