தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் இரண்டு சக்கர வாகனம் அன்பளிப்பாக தந்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ் !!
மாற்றுத்திறனாளி குழுவினருக்கு இருசக்கர வாகனம் தந்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ் !!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், சமீபத்தில் நடந்த பத்திரிக்கை சந்திப்பில் கூறியது போலவே தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஸ்கூட்டி அன்பளிப்பாக தந்து அசத்தியுள்ளார்.
மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல உதவிகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே! அவர் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக கை கொடுக்கும் கை எனும் ஆதரவு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த அமைப்பில் வாழும் மாற்றுத்திறனாளி குழுவினர் நடனம் முதலான பலவிதமான திறமைகளில் பல துறைகளில் அசத்தி வருகின்றனர். அது போல் தற்போது
தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்விலும் அசத்தி வருகின்றனர். இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்த இந்த கலையில், தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு அதனை முறையாக கற்றுக்கொண்டு அசத்தி வருகின்றனர். இவர்களை அறிமுகப்படுத்தும் பத்திரிக்கை ஊடக சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்து பேசும்போது….
நடந்து செல்ல மிகவும் சிரமமாக இருப்பதாக சொன்னார்கள் அது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது அதனால் இவர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் வாங்கி தரவிருக்கிறேன்.
அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன், அதன் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன். நீங்களும் இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளியுங்கள் என்று பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டில், மாற்றுத்திறனாளி குழுவினரைச் சந்தித்து பாராட்டியதோடு, சொன்னது போலவே ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்கூட்டி வழங்கி அசத்தியுள்ளார். தன்னலமற்ற உதவிகளை செய்து வரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸை அனைத்து தரப்பினரும் பாரட்டி வருகின்றனர்.