காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்:

 

திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!

தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்

உலக அதிசய தலைவா..!
ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே
வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை வாய்ந்த பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள
கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் அன்று அவரது சமாதிக்கு வந்து தங்களது பொற்கரங்களால் பொன்னாடை போத்திட வேண்டுகிறோம்

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைத்து காயிதே மில்லத் தொடங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை ஆட்சியில் பங்குபெற செய்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் ஒரே தலைவர் நீங்கள்தான்.

நாளுக்கு நாள் தங்களது புகழ் கூடிக்கொண்டே போகின்றது.
உங்களது வாக்கு அப்படியே பலிக்கின்றது.
நடக்கப் போவதை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே கூறுகின்ற ஆற்றல் படைத்த தீர்க்கதரிசினி நீங்கள்.

இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று கூறிய காயிதே மில்லத் அவர்களின் வழியில் தமிழக வெற்றி கழகத்தின் இஸ்லாமிய பெண்ணை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய அதிசய தலைவர் நீங்கள்.

சிறுபான்மை நலன் காக்கும் அரசு என்று தங்களின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தலைவர் நீங்கள்.

சிறுபான்மையினர் மக்களின் பாதுகாவலன் என்று இதுவரை மக்களை ஏமாற்றி வந்தவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அவர்களின் போலி முகத்திரையை கிழித்த தலைவர் நீங்கள்.

வழி தெரியாமல் இருந்த நாங்கள் இனி உங்களின் பின்னால் என்றென்றும் தொடர்வோம்

முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவியை கொடுத்த முதல் செயலே தங்களை உலக அதிசய தலைவர் ஆக்கியது என தேவர் திரைப்பட நடிகர் ஜெ.எம் பஷீர் அறிக்கை விடுத்துள்ளார்.

cinema newskollywood newsLatest Cinema Newslatest kollywood newslatest tamil cinema newstamil cinema news
Comments (0)
Add Comment