செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்”
– கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.
கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்.
பத்திரிகை யாளர்களை முன் கள பணியாளர்களாக அறிவித்தார் திமுக தலைவரும்., விரைவில் முதல்வர் ஆக இருப்பவருமான ஸ்டாலின். மீடியாவுக்கு திமுக அரசு கொடுத்த அங்கீகாரம். இ ந்த முயற்சிக்கு உழைத்த சென்னை பிரஸ் கிளப், அண்ணன் பாரதி தமிழன் மற்றும் அனைத்து சங்கம், நிர்வாகிகள் நல்ல உள்ளங்களுக்கு நன்றி