வைரமுத்துவின் சர்வதேசத் தமிழ்த்தாய் வாழ்த்து

வைரமுத்துவின் சர்வதேசத் தமிழ்த்தாய் வாழ்த்து
இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் இன்று வெளியீடு

கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்களை பிரபல இயக்குனர்களைக் கொண்டு காட்சிப்படுத்தி, அதை தனியார் தொலைக்காட்சியிலும் இணையதளங்களிலும் ‘நாட்படுதேறல்’ என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்புகிறார்கள். அந்த வரிசையில் இன்று “எழுத்தும் நீயே” என்ற ‘உலக தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் வாழும் தமிழர்களையும் கருத்தில் கொண்டு, தமிழர்களுக்கான புதிய தமிழ்த்தாய் வாழ்த்தாக இந்த பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமைகளை காட்சிப்படுத்தி, இந்த இசை ஆல்பத்தை கட்டில் திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு இயக்கியுள்ளார், நடிகை சிருஷ்டி டாங்கே மற்றும் அபிசரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வித்யாசாகர் இசையில்
நீ.க.ராஜராஜன்
ஒளிப்பதிவில் ,
ராஜேஷ்குமார் படத்தொகுப்பில்
மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கிறது இப்பாடல்.

உலகத்தமிழர்களின் உள்ளங்களில்
இல்லங்களிலும்
உயர்ந்த சபைகளிலும் இந்த பாடல் இடம் பிடிக்கும் என்று உற்சாகமாக கூறுகின்றார் இ.வி.கணேஷ்பாபு.

Ev Ganesh BabuEzhuthum NeeyeNaatpadu Theral 02 - 13Srushti DangeVairamuthuVidyasagar
Comments (0)
Add Comment