‘லாக் டவுன்’ படத்திற்கு பிறகு நிறைய புதிய படங்களில் நடித்து வருகிறார் விநாயகராஜ்!

‘லாக் டவுன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படக்குழுவினர்கள் பாராட்டு மட்டுமல்ல ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார் விநாயகராஜ்.

திருப்பதி, ஆஞ்சநேயா, சிகரம் தொடு, புலி வருது, மாமனிதன், திருவின் குரல், பீட்சா 3′, லைன்மேன் ஆகிய படங்கள் ஒவ்வொன்றிலும், தனது தனித்திறமையை காட்டிய விநாயகராஜ், சமீபத்தில் வெளியான லாக் டவுன் படத்திலும் தனது நடிப்பு திறமையால் தனித்து தெரிந்தார்.

இதனை தொடர்ந்து, சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘உயிரிலே கலந்தது’ படத்தின் இயக்குனர் கே.ஆர்.ஜெயா இயக்கத்தில் புதிய படமொன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் முழு விபரங்கள் வெளியிடப்பட உள்ளது.

நடிகர் விநாயகராஜை, இனி கதையின் நாயகனாக பல படங்களில் பார்க்கலாம்!

#ActorVinayagaraj
#Vinayagaraj

@GovindarajPro

ActorVinayagarajcinema newskollywood newslatest cinem newslatest kollywood newslatest tamil cinema newsLock down movietamil cinema news
Comments (0)
Add Comment