தென்னிந்தியாவின் உன்னத கலைஞர்… தன் மூச்சுக்காற்று முழுதும் இசையால் நிரப்பி கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகிறவர் SPB.
இந்திய சினிமாவில் இப்படி மூன்றெழுத்து பெயரில் அழைக்கப்பட்ட ஜாம்பவான்கள் மறைந்தாலும் மக்கள் மனசில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எத்தனை ஆயிரம் பாடல்கள்… புகழின் உச்சத்தில் இருந்தாலும் எளிமையாக எல்லாரிடமும் இன்முகம் காண்பித்து பழகும் மாபெரும் இசைக் கலைஞன் மறைவு தென்னிந்திய சினிமாவுக்கு பெரும் இழப்பு.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் திரைக்குடும்பமாக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களும் இணைந்து கொள்கிறோம்.
மண்ணில் பாடி மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞனை விண்ணில் தன் சமூகத்தில் பாட இறைவன் அழைத்து கொண்டாரோ…
மண்ணில் மறைந்தாலும் உலகம் உள்ளவரை உங்கள் இசைக் குரல் ஒலித்து கொண்டே இருக்கும்.
துக்கத்துடன்
நிர்வாகிகள், உறுப்பினர்கள்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்(TMJA), சென்னை.