இன்று மட்டும் 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது.
இன்று 3,509 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 1,834 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,648
இன்றைய 3,509 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 70,977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 39,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.