#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 15th Sep.,
By
Naveen on September 15, 2020
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்வு
இன்று மட்டும் 5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,14,000–த்தை தாண்டியது.
இன்று 5,697 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 989 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,50,572.
இன்றைய 5,697 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 5,14,208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 5,735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 4,58,900 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இறப்பு –68/ 8,502
https://stopcorona.tn.gov.in/