திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த முதல்வருக்கு வானளவு நன்றியினை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க துணைத் தலைவரும், அரசு சின்னத்திரை விருது தேர்வுக் குழு உறுப்பினரும், கழக நட்சத்திர பேச்சாளரும், நடிகரும் இயக்குநருமான எஸ்.ரவி மரியா கூறினார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது
கொரோனா என்னும் கொடிய நோய் கொடூர தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு நமது மாண்புமிகு
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் இதர அனைத்து தொழில்களை போலவே சினிமாத்துறையும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இந்த பாதிப்பால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் விதமாக திரைப்பட நல வாரியம் மூலம் திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள அனைவருக்கும் இதுவரை மூன்று முறை ரூபாய் ஆயிரத்தை பேரிடர் கால நிதி உதவியாக பெரிய மனம் கொண்டு நமது முதலமைச்சர் வழங்கினார். மேலும் அம்மா உணவகங்கள் மூலம் ஏழை ,எளிய மக்களின் பசியை போக்கினார். ஒரு பக்கம் கொரோனாவின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான முயற்சியும், மறுபக்கம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற பொறுப்புணர்வில் இருந்த நம் முதல்வர் ஊரடங்கிற்கு மத்தியில் பல்வேறு தளர்வுகளை படிப்படியாக வழங்கினார். அந்த தளர்வுகள் மக்கள் இயல்பு வாழ்க்கையை நடத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் உதவியது. இருந்த போதிலும் திரைப்பட தொழில் என்பது கூட்டம் கூட்டமாக சேர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு தொழில். இதனால் கொரோனா நோய் எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கேற்ப திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. திரையுலகை மட்டுமே நம்பி அன்றாட சம்பளத்தில் பணிபுரிந்து வாழ்க்கையை நடத்தும் திரைப்பட தொழிலாளர்கள் முதல் கோடிக்கணக்கில் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வரை இந்த தாமதம் இயற்கையால் நடக்கிறது என்று உணர்ந்து தங்களை தாங்களே தேற்றிக் கொண்டு மன உளைச்சலோடு வாழ்ந்து வந்த வேளையில் புரட்சித்தலைவரும், புரட்சித் தலைவியும் வாழ்வாங்கு வாழ்ந்து வந்த திரையுலகம் பொருளாதார பாதிப்பில் நலிவடைந்து விடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் திரைப்பட படப்பிடிப்பிற்கான அனுமதியை ஈர மனதோடு நமது முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். முதல்வரின் இந்த அறிவிப்பு தொலைக்காட்சியில் முதல்வரின் தளர்வு அறிவிப்பில் திரைப்பட படப்பிடிப்பிற்கான அனுமதி வந்திருக்கிறதா என்று தினம் தினம் பார்க்கும் ஆயிரக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின், திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களின், திரைப்பட தயாரிப்பாளர்களின் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது. பல்வேறு கொரோனா தடுப்பு பணி
ஆய்வுகளுக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்றுஇந்த கொரோனா காலத்திலும் அச்சமின்றி மக்கள் பணி செய்து வரும் நமது முதலமைச்சர் அந்த பணிகளோடு திரைத்துறையையும் இதயத்தில் ஏற்றி திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததற்காக நமது மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும், அவருக்கு தோளோடு தோள் கொடுத்து துணையாக நிற்கின்ற மாண்புமிகுதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், எங்கள் சினிமாத்துறைக்கும், முதல்வருக்கும் பாலமாக இருந்து படப்பிடிப்பிற்கு அனுமதி வேண்டி பரிந்துரை செய்து மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் சி.ராஜூ அவர்களுக்கும் வானளவு நன்றியினை இரு கரம் கூப்பி தெரிவிக்கின்றேன்
இவ்வாறு நடிகர் எஸ்.ரவி மரியா கூறினார்.