“முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள்”- முதல்-அமைச்சர் வேண்டுகோள்

784

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நன்கொடை செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும்  ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும்  என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் அளிக்கும் நன்கொடை முழுவதும் கொரோனா மருத்துவ கட்டமைப்பிற்கு மட்டுமே செலவிடப்படும். மேலும், செலவீனங்கள் குறித்த வெளிப்படையான தகவல்கள் மக்களுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com